பேலியகொட மீன் சந்தையில் இறால் கொள்வனவு செய்த வடை வியாபாரிக்கு கொரோனா..!
பொலன்னறுவை மாவட்டத்திற்குட்பட்ட பகமுன எனும் பகுதியில் வடை வியாபாரம் செய்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பகமுன பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வடை வியாபாரியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர், கடந்த தினங்களில் இறால் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post பேலியகொட மீன் சந்தையில் இறால் கொள்வனவு செய்த வடை வியாபாரிக்கு கொரோனா..! appeared first on Helanews.